19,20,21 ஆகஸ்ட் 2011 ஆகிய நாட்களில், கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதை பயிலரங்கு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டேன். தமிழகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் பயிலரங்கை வழிநடத்தினார்.இவரோடு, முனைவர் கார்த்திகேசு, முனைவர் முல்லை இராமையா, கோ.புண்ணியவான், முனைவர் ஆறு.நாகப்பன், வ.முனியன் போன்ற நமது நாட்டு எழுத்தாளர்களும் பயிலரங்கை வழிநடத்தினர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிலரங்கு பயன்மிகு நிகழ்ச்சியாக அமைந்தது.