திங்கள், 17 அக்டோபர், 2011

Simposium Linguistik dan Kesusasteraan Tamil Anjuran bersama Fakulti Bahasa & Linguistik dan Per.Guru-Guru Kesusasteraan Tamil Malaysia 2011

தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன்
நண்பர்களுடன்
கடந்த 28 மே முதல்1 ஜுன் 2011 வரை, மலேசிய இலக்கிய ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்மொழி மொழியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகமும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்க்கல்வித் துறை தமிழ்ப்பல்கலைக்கழகமும் (தஞ்சாவூர் தமிழ் நாடு )இணைந்து தமிழ் மொழியியல் & தமிழ் இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை மிகச்சிறப்பாக நடத்தியது. இவ்வாய்வரங்கின் செயற்குழு உறுப்பினராகவும் பங்கேற்பாளராகவும் கலந்துகொண்டேன்.

Seminar Perdana SPM 2011 - Anjuran Per.Guru-Guru Bahasa Tamil SMK N.Johor.

               ஜோகூர் மாநில இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 15 அக்டோபர் 2011 அன்று எஸ்.பி.எம் தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாஆ இடைநிலைப் பள்ளி மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றனர். மலாய் மொழி, ஆங்கிலம், வரலாறு, நன்னெறி ஆகிய பாடங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அனுபவமிக்க ஆசிரியர்கள் இக்கருத்தரங்கினை வழிநடத்தினர். சாஆ இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து (பேருந்து) செலவை, ம.இ.கா லாபீஸ் தொகுதி தலைவர் திரு.ஜெயராமன் பி.ஐ.எஸ்.அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜோகூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரரும் மக்ஹோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு துவான் ஹஜி முகமட் ஜைஸ் பின் சர்டாய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக  இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். காலை 8.00 மணிக்குத் தொடங்கிய இக்கருத்தரங்கு சுமார் மாலை மணி 5.00க்கு நிறைவை நாடியது.