திங்கள், 19 செப்டம்பர், 2011

"Benchmarking" ke Singapura - Umar Pulavar Tamil Language Centre, Ang Mo Kio Public Library & Singapore Tamil Teachers Union.


16 செப்டம்பர் 2011 அன்று, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சிங்கப்பூர் கற்றல் பயணம் மேற்கொண்டோம். இக்கற்றல் பயணத்தில் நாற்பது இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலயத்திற்குச் சென்றோம். அவர்களின் கனிவான வரவேற்பும் உபசரிப்பும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.உமறுப்புலவர் நிலையத்தின் மேற்பார்வையாளர் எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டியன் அவர்களின் படச்சுருள் விளக்கம் நடைபெற்றது. தொடர்ந்து கலந்துரையாடலும் நிலையத்தின் பார்வையிடல் அங்கமும் இடம்பெற்றது. தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கு சிங்கை அரசு மேற்கொள்ளும் திட்டங்களும் பணிகளும் போற்றுதற்குரியவையாகும்.
                 தொடர்ந்து, அங் மோ கியோ பொது நூலகத்திற்குச் சென்றோம். அங்கு திருமதி. மீனாட்சி சபாபதி அவர்களைச் சந்தித்தோம். அவர்களுடன் கலந்த்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டோம். இறுதியாக, சிங்கை தமிழாசிரியர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது. சங்கத்தின் தலைவர் திரு.சாமிக்கண்ணு அவர்களின் விளக்கவுரை இடம்பெற்றது.

இக்கற்றல் பயணம் ஜோகூர் மாநில இடைநிலைபபள்ளி தமிழாசிரியர்களிடையே பெரும் ஊக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக