புதன், 14 செப்டம்பர், 2011

Bengkel Penataran Format Baru Mata Pelajaran Bahasa Tamil SPM 6354. Anjuran PPD Segamat.

கடந்த  8 செப்டம்பர் 2011 அன்று, அடுத்த ஆண்டுக்கான எஸ்.பி.எம் தமிழ்மொழி தாள் புதிய வடிவம் பற்றிய பயிலரங்கு நடைப்பெற்றது. சிகாமாட் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. இப்பயிலரங்கு சிகாமட் மாவட்ட மொழி அதிகாரி உயர்திரு சீ.கனகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் 20 தமிழ்மொழி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் திரு.குணசேகரன் அவர்களின் இறைவணக்கத்தோடு  இப்பயிலரங்கு தொடங்கியது. தொடர்ந்து, சிகாமட் மாவட்ட தமிழ்மொழி பணித்தியத்தின் செயலர் ஆசிரியர் திரு.இரமணி தருமன் அவர்களின் வரவேற்புரையும் விளக்கமும் இடம்பெற்றது.  பிறகு, இப்பயிலரங்கு  ஆசிரியை திருமதி கண்ணியம்மாள் அவர்களால் வழிநடத்தப்பட்டது. குழுமுறையில் மாதிரி வினாத்தாள் ஒன்று உருவாக்கப்பட்டது. சுமார் மாலை 3.00 மணிக்கு மொழி அதிகாரி உயர்திரு சீ.கனகலிங்கம் அவர்களின் உரையோடு இப்பயிலரங்கு நிறைவை நாடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக