செவ்வாய், 13 செப்டம்பர், 2011

Persidangan Kesusasteraan Tamil Malaysia - Singapura 2011 - Lotus Desaru Beach Resort


கடந்த 26 & 27 பிப்ரவரி மாதம் 2011 -ல், ஜோகூர் மாநில தமிழர் சங்கமும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் இலக்கிய மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தியது. அதில் பேராளராகக் கலந்து கொண்டேன். இலக்கிய சுவை நிறைந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பல்லூடகங்கள், இணைய பதிவாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இரண்டு நாட்கள் இலக்கிய கடலில் மூழ்கியிருந்தோம். படைப்பாளர்கள், நண்பர்கள் பலரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பையும் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தித் தந்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜோகூர் மாநில தமிழர் சங்கத்திற்கும் சிங்கை தமிழ் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக